அமைச்சர் அன்பில் மகேஷ் குறித்து அவதூறு பரப்பிய விடுதலை சிறுத்தை கட்சியினர் மீது வழக்கு பதிவு

அமைச்சர் அன்பில் மகேஷ் குறித்து அவதூறு பரப்பிய விடுதலை சிறுத்தை கட்சியினர் மீது வழக்கு பதிவு

திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பற்றி பெல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க பொதுச் செயலாளர் மற்றும் அவரது நண்பர் அவதூறாக பேசியது குறித்து சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து பெல் போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனம் மத்திய பொது துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த பெல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொழிற்சங்க பொதுச் செயலாளர் இளந்தமிழன் மற்றும் அவரது நண்பர் சந்திரசேகர் ஆகிய இருவரும், கடந்த 1ம் தேதி திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பற்றி சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்களில் மோசமான செய்தியை பரப்பியுள்ளனர். 

இது குறித்து, பெல் ஒப்பந்த தொழிலாளர் தொமுச தொழிற் சங்க துணைச் செயலாளர் மோகன்ராஜ் (48) பெல் காவல் நிலையத்தில் அன்றே புகார் செய்தார். அதன் அடிப்படையில் இளந்தமிழன் மற்றும் நண்பர் சந்திரசேகர் ஆகிய இருவர் மீதும் பெல் போலீசார் வழக்குபதிவு செய்யது உள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய..... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn