மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்

திருச்சி திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு புறநகர் மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த் தலைமை வைத்தார்.

திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை கையில் ஏந்திய படியும், கோஷமிட்டவாறு பேரணியாக திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். இதனை தொடர்ந்து ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணியில் நடைபெறும் மாற்று திறனாளிகளுக்கான பணி தொய்வு மற்றும் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும்.

100 நாள் தொடர்ச்சியாக வேலை வழங்கிட வேண்டும். மூன்று சென்ட் இலவச வீட்டுமனையை மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்து உடனடியாக வழங்க வேண்டும். உதவி தொகை வழங்குவதில் அதிக நாட்களைக் கடத்தாமல் தகுந்த நேரத்தில் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தங்கள் கோரிக்கை மனுக்களை மாற்றத்தினாளிகள் அளித்தனர். இதில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn