இக்குழந்தையின் பெற்றோர் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல் தெரிவிக்கலாம்

இக்குழந்தையின் பெற்றோர் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல் தெரிவிக்கலாம்

திருச்சி மாநகரம், தேவதானம், இ.பி. ரோடு பகுதியில் கடந்த மே மாதம் 26ம் தேதி அன்று பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு திருச்சி அண்ணல் காந்திநினைவு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. 

சிகிச்சை முடிந்து குழந்தைகள் உதவி மையம் மூலமாக கடந்த 2ம் தேதி அன்று திருச்சி குழந்தைகள் நலக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டது. அக்குழந்தைக்கு பிரவின் என்று பெயரிட்டு திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவின் தற்காலிக பராமரிப்பு ஆணை வாயிலாக பெரம்பலூர் நல்ல ஆலோசனை மாதா அன்பு இல்லம் சிறப்பு தத்துவள மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இக்குழந்தையை பற்றிய விவரங்கள் மற்றும் பெற்றோர் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் இவ்வறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும், குழந்தையை உரிமைகோரி எவரும் தொடர்பு கொள்ளாத நிலையில், குழந்தையை சட்டப்படி தத்து கொடுப்பதற்கு தடையில்லா சான்று வழங்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision