நாடு மிகவும் கெட்டு கிடக்கிறது திருச்சியில் வைகோ பேச்சு

நாடு மிகவும் கெட்டு கிடக்கிறது திருச்சியில் வைகோ பேச்சு

திருச்சி மாவட்ட அந்தநல்லூர் துணைச் செயலாளர் பன்னீர்செல்வம் இல்ல திருமண விழாவிற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ (எம் பி) கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து விழா பேருரை ஆற்றினார்.

அப்போது பேசிய வைகோ.... நாடு மிகவும் கெட்டுப் போய் கிடக்கிறது. திருவள்ளுவரின் நெறிகள் மீறி நடக்கிறது. வடமொழி ஏகாதிபத்தியத்தின் மூலம் சமஸ்கிருதத்தை திணிக்கிறது. இந்துத்துவத்தை திணித்து கொடுமை நடக்கிறது என குறிப்பிட்டு பேசினார். மேலும் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று அனைவரும் ஒன்று கூடுவோம் என அழைப்பும் விடுத்துள்ளார்.

மேலும் மணவிழாவில் பேசிய போது இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவிக்கு இடையே ஆறு வாரம், ஆறு மாத காலம் என உறவுகள் பிரியும் நிலை உள்ளது. இந்நிலை இருக்கக் கூடாது ஒருவருக்கொருவர் அன்பு செய்து இல்லற வாழ்க்கை வாழ வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட நகர ஒன்றிய செயலாளர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், அந்தநல்லூர் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் ,திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள், திருச்சி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ,ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள்,ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO