ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மாதந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு இன்று (26.10.2022) கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைகோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர்  ஆர் ஹரிஹர சுப்பிரமணியன் , கோயில் மேலாளர் திருமதி கு.தமிழ்செல்வி ஆகியோர் மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வர்களால் பக்தர்களின் காணிக்கைகளை கணக்கிட்டனர்.

பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டதில், 88 லட்சத்து 79 ஆயிரத்து 682 ரூபாய் ரொக்கமும், 175 கிராம் தங்கமும், 946 கிராம் வெள்ளியும் மற்றும் 162 வெளிநாட்டு கரன்சி தாள்கள் காணிக்கைகளாக வரப் பெற்றுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...  https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO