திருச்சி அருகே போலீசார் வாகன சோதனையில் 340 கிலோ குட்கா பறிமுதல்

திருச்சி அருகே போலீசார் வாகன சோதனையில் 340 கிலோ குட்கா பறிமுதல்

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதிக்கு குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி நவாமரம் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது காரில் 100 கிலோ பான்பராக், குட்கா இருப்பது தெரியவந்தது.

பின்னர் காரை பறிமுதல் செய்து, ஓட்டுனர் முருகேசன், கலீல்தீன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் திருச்சி சோமரசம்பேட்டையில் உள்ள குடோனில் இருந்து குட்கா பொருட்கள் எடுத்து வரப்படுவதாக கூறியதையடுத்து குடோனில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இந்த குடோனில் மறைத்து வைத்திருந்த 240 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 340 கிலோ குட்கா பொருட்களை துறையூர் போலீசார் பறிமுதல் செய்து 2 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn