21 வழக்குகள் பதிவு - வருமானவரித்துறை விசாரணை - மாவட்ட ஆட்சித்தலைவரும் / மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரதீப் குமார் பேட்டி.

21 வழக்குகள் பதிவு - வருமானவரித்துறை விசாரணை - மாவட்ட ஆட்சித்தலைவரும் / மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரதீப் குமார் பேட்டி.

திருச்சி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற வாக்குப் பெட்டிகள் வாக்கு என்னும் மையத்தில் வைத்து சீல் வைக்கப்பட்டது. தமிழகத்தில் நேற்று ஒரே கட்டமாக 18வது நாடாளுமன்ற தேர்தல் காலை 07:00 மணிக்கு துவங்கி மாலை 06:00 மணிக்கு முடிவுற்றது. இதனை தொடர்ந்து திருச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட் மின்னணு வாக்கு இயந்திரங்கள் விவி பட் சீல் வைக்கப்பட்டு வாக்குச்சாவடியில் இருந்து வாக்கு எண்ணிக்கை மையமான ஜமால் முகமது கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு கட்டுப்பாட்டு இயந்திர அறையில் வைக்கப்பட்டது .

இதைத் தொடர்ந்து அங்கு தேர்தல் பொது பார்வையாளர் தினேஷ்குமார் முன்னிலையில், மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரதீப்குமார் வாக்குப்பட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையை அனைத்து கட்சியினர் முன்பு சீல் வைக்கப்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரதீப்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்..... ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலிருந்தும் வாக்கு இயந்திரங்கள் நேற்று ஜமால் முகமது கல்லூரியில் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 67.42 % பதிவான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து இருந்தால் கண்டிப்பாக இன்னும் வாக்கு சதவீதம் உயர்ந்திருக்கும். நகர்ப்புற பகுதிகளில் வாக்கு சதவீதம் குறைவாகத்தான் உள்ளது. நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சில கோளாறுகள் காரணமாக விவிபேட் மட்டும் கட்டுப்பாட்டு கருவிகள் மாற்றம் செய்யப்பட்டது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் விதிமீறல்கள் தொடர்பாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த நேரத்தில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 5.8 கோடி , தங்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் என மொத்தம் 8.6 கோடி வரை பறிமுதல் செய்துள்ளோம். அனைத்திற்கும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானவரித்துறையினர் அதற்கான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூன்றடுக்கு பாதுகாப்பு பணி இங்கு போடப்பட்டுள்ளது. இதில் ஒரு அடுக்கில் துனை ராணுவ கம்பெனியை சேர்ந்தவர்கள் இருப்பார்கள். 24 மணி நேரமும் சிசிடிவி கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வாக்குப்பதிவு நாளில் சில நிறுவனங்கள் செயல்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக ட்விட்டரில் கூட நமக்கு ஒரு புகார் வந்திருந்தது. உடனடியாக அந்த நிறுவனத்தை அணுகி விடுமுறை விட சொல்லி ஏற்பாடு செய்தோம். ஒரு வேட்பாளர் வாக்குக்கு பணம் கொடுத்ததாக புகார் வந்ததாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு, அப்படி புகார் இருந்தால் அதற்குரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision