திருச்சி அருகே மன உளைச்சலில் கணவன் மனைவி விஷம் குடித்து தற்கொலை - போலீசார் விசாரணை.

திருச்சி அருகே மன உளைச்சலில் கணவன் மனைவி விஷம் குடித்து தற்கொலை - போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி அண்ணா நகரை சேர்ந்தவர் ரமேஷ் (44). இவரது மனைவி சுமித்ரா (35). இந்த தம்பதியின் மகன் முருகானந்தம். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது பெற்றோர் வசித்து வந்த வீட்டை காலி செய்யும்படி முருகானந்தம் வற்புறுத்தியுள்ளார். இதனால் கணவன், மனைவி இருவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

இந்நிலையில் நேற்று அரளி விதையை அரைத்து குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தனர். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் சுமித்ராவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து ரமேஷ் தந்தை நடராஜன் கொடுத்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஒரே நேரத்தில் கணவன் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision