பீமநகர் பகுதியில் இரவு நேரங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது

பீமநகர் பகுதியில் இரவு நேரங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் தளர்வுகளற்ற அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சியில் வாகன சோதனையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குற்ற சம்பவங்கள் பெருமளவு குறைந்து உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக திருச்சி பீமநகர் பகுதியில் இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் பணம் பறிப்பதாக புகார் எழுந்தது. இதனடிப்படையில் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார் நான்கு வாலிபர்களை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம நடத்திய விசாரணையில், காஜாபேட்டையைச் சேர்ந்த 4 பேரும் இரவு நேரங்களில் பீமநகர் பகுதியில் தனியாக நடந்து செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போன்கள் பறிப்பது ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 4 பேரை கைது செய்து கொரோனா பரிசோதனை செய்த பின்னர் மத்திய சிறையில் அடைத்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx