மெல்ல மலரும் செல்லக் குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி

மெல்ல மலரும் செல்லக் குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூர் ஒன்றியத்தில் சிறப்பு தேவை உள்ள குழந்தைகள் மற்றும் மெல்ல மலரும் செல்லக் குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி வழங்க உள்ள 15 தன்னார்வலர்களுக்கு ஹோலிகிராஸ் சர்வீஸ் சொசைட்டி திருச்சியில் ஒரு நாள் பயிற்சி நடத்தப்பட்டது. பள்ளிக்கு 10 குழந்தைகள் வீதம் 150 குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

அக்குழந்தைகள் எவ்வாறு அணுக வேண்டும் என்பதை இத் துறையில் 40 ஆண்டு கால அனுபவம் உள்ள பயிற்சியாளர்பேராசிரியர் பிரபாகர்  பயிற்சி அளித்தார். SMC மாநிலக் கருத்தாளர் S.சிவக்குமார்  மனதின் செயல்கள் பற்றிய சிறப்பான பயிற்சியை வழங்கினார்.

இரா.இராஜேந்திரன் த.ஆ (ஓய்வு)  மொழியியல் கற்பித்தல் அடிப்படைகளை பயிற்சி அளித்தார்கள். தன்னார்வலர்களுக்கு நேரடி பயிற்சியும் வழங்கப்பட்டது. பெல் சிட்டா வட்டார ஒருங்கிணைப்பாளர் பயிற்சியை ஒருங்கிணைத்தார் - வட்டாரக் கல்வி அலுவலர்கள் பங்குபெற்று வாழ்த்தினர் இன்றுமுதல் மாணவர்களுக்கு கற்பித்தல் பணி தொடங்க உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO