திருச்சி ரயில் நிலையத்தில் தானியங்கி நகரும் படிக்கட்டில் சாய்ந்து விழுந்த பெண்

திருச்சி ரயில் நிலையத்தில் தானியங்கி நகரும் படிக்கட்டில் சாய்ந்து விழுந்த பெண்

திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் 2மற்றும் 3வது நடைமேடைக்கு பயணிகள் செல்வதற்காக எஸ்கேலேட்டர் அமைக்கப்பட்டுள்ளது முக்கிய ரயில்கள் இரண்டாவது மூன்றாவது நடைமேடையில் வருவதால் வயதானவர்கள், சிறு குழந்தைகளை அழைத்து வருபவர்கள் எஸ்கேலேட்ரை பயன்படுத்த வசதி ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பெண்மணி ஒருவர் தானியங்கி நகரும் படிகட்டில் செல்லும் பொழுது இறுக்கமாக  கைப்பிடியைப் இறுக்கமாக பிடித்ததால் அவரால் படியில் மேலே செல்ல முடியவில்லை. பின்னோக்கி சாய்ந்து விழுந்தார். அப்பொழுது உதவி ஆய்வாளர் ராஜ்குமார் என்பவர் அப்பெண்ணை காப்பாற்றினார்.

இக்காட்சி அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இச்சம்பவத்தால் எஸ்கேலேட்டர் நிறுத்தப்பட்டது. பின்னர் அப்பெண்மணியை நடைமேடைக்கு அழைத்து சென்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO