திருச்சி மாநகரில் 600 பேர் மீது வழக்கு பதிவு

திருச்சி மாநகரில் 600 பேர் மீது வழக்கு பதிவு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் மீது என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையை கண்டித்து, திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் நேற்று (23.09.2022) அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 80 பெண்கள் உட்பட 500 பேர் மீது காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தலையில் முக்காடு போட்டு போராட்டம் நடத்திய விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட, 100 பேர் மீது அமர்வு நீதிமன்றம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO