காதல் விவகாரம் - சிறுவன் வீட்டில் சிறுமி சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை.

காதல் விவகாரம் - சிறுவன் வீட்டில் சிறுமி சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டத்தில் 17 வயது சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் தாய் சிறுவனை கண்டித்துள்ளார். ஆனால் இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர். இந்நிலையில் எங்களை பிரிக்க நிலைத்தால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டிய சிறுமி வாக்குவாதம் செய்து காதலன் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

பின்னர் தன்னை நாடி வந்த காதலிக்காக சிறுவன் பூ மார்கெட்டில் மாலை கட்டும் வேலைக்கு சேர்ந்து வேலை செய்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் மூன்று மாதம் ஒன்றாக இருந்த நிலையில், தீபாவளி பண்டிகைகாக ஆடை எடுக்க கஞைவீதிக்கு சென்றுவிட சிறுவனின் பாட்டி வயல் வேலைக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வந்த கதவை திறந்தபோது சிறுமி வீட்டின் உள்ள மின் விசிறியில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக இருந்துள்ளார். 

இதையடுத்து பாட்டி கத்தி கூச்சலிட்டு அழுதபோத அக்கம்பக்கத்தினர் வந்து தூக்கில் தொங்கிய நிலையிலிருந்த சிறுமியை மீட்டனர். இதனை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மண்ணச்சநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரி மற்றும் காவலர்கள் சிறுமியின் உடலை கைப்பற்றி ஶ்ரீரங்கம் அரசு மருத்துவ மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகாக அனுப்பிவைத்தனர்.

பின்னர் சிறுமியின் மரணம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து மகள் இருந்த தகவல் அறிந்த தாய் கதறி அழுதார். மேலும் தனது மகள் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றும், இரவு தன்னிடம் தொலைபேசியில் பேசியதாகவும் அப்போது அவர் தனக்கு உடம்பெல்லாம் எரிகிறது உடல் சோர்வாக இருக்கிறது என்று கூறி அழுததாக கூறினார்.

இதனால் தனது மகளை அடித்து துன்புறுத்தி இருக்கலாம் என்றும் இதனால் தனது மகளிர் இறப்பின் உண்மையை உடனே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்தில் காவலர்களுடன் உறவினர்களுடன் சூழ்ந்து கொண்டு வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போலீசார் சிறுமியின் தாயார் மற்றும் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின் அடிப்படையில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து காவ‌ல்துறை‌யின‌ர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision