இரவு 8 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவு

இரவு 8 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவு

திருச்சி மாவட்டம் துறையூர் தனி சட்டமன்ற தொகுதி பூத் எண் 210-ல் இரவு 8 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவு. இப்பகுதியில் பெரும்பாலான வாக்களர்கள் நரிக்குற இன மக்கள் ஆவார். இவர்களுக்கு போதிய தேர்தல் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இவர்கள் வாக்களிக்க வரும் பொழுது அடையாள அட்டை ஏதுமின்றி தேர்தல் அலுவலரால் கொடுக்கப்பட்ட பூத் ஸ்லிப் ஆகியவற்றை எடுத்து வர மறந்ததால் அவர்களுக்குள் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்ததால் அதனால் தேர்தல் வாக்கு சாவடி அதிகாரிகளும் தடுமாறினர்.

பிறகு அவர்களுக்கு தேர்தல் வாக்குப்பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்களை எடுத்து வருமாறு அறிவுரை கூறி அனுப்பியதால் வருவதற்கு நீண்ட நேரம் ஆனதாகவும் மேலும் ஆண் பெண் ஆகியோர் வரிசையை பின்பற்றாமல் நடந்து கொண்டதால் காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision