ஆதரவற்று சுற்றி திரிந்த மூதாட்டி மீட்கப்பட்டு முதியோர் இல்லத்தில் சேர்ப்பு

ஆதரவற்று சுற்றி திரிந்த மூதாட்டி மீட்கப்பட்டு முதியோர் இல்லத்தில் சேர்ப்பு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட மருத்துவமனை பேருந்து நிறுத்தம் முன்பாக முன்பின் தெரியாத சுமார் 57 வயது மதிக்கத்தக்க பொன்னழகி என்ற மூதாட்டி ஆதரவற்ற நிலையில் இருந்தார்.

இவரை  திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் மீட்டெடுத்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பாதுகாப்பு நலன்கருதி திருச்சிராப்பள்ளி கிராப்பட்டி பகுதியில் அமைந்துள்ள கங்காரு முதியோர் இல்லத்தில் வைத்து, உறவினர்களை அடையாளம் காணும் வரை பராமரிக்க காவல் நிலைய உதவி ஆய்வாளர் மதியழகன் முதியோர் இல்ல செயல் இயக்குனர் ராஜாவிடம் மூதாட்டியை ஒப்படைத்தார்.

இதுகுறித்து விஜயகுமார் பகிர்ந்துக்கொள்கையில் அரசு மருத்துவமனை அருகில் நின்று கொண்டிருந்தவரை விசாரித்தபோது   பிள்ளைகள் தன்னை கைவிட்டு விட்டதாகவும் தன்னுடைய கணவர் வெளியூரில் பணியாற்றுவதாக கூறினார்.

எனவே பிள்ளைகள் வந்து அழைத்துச் செல்லும் வரை அவர் பாதுகாப்பு நலன் கருதி முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn