திருச்சி மாவட்டத்தில் 378 கி‌.மீ தூரம் வாய்க்கால் தூர்வாரப்பட்டு தயாராக உள்ளது -அமைச்சர் நேரு பேட்டி

திருச்சி மாவட்டத்தில் 378 கி‌.மீ தூரம் வாய்க்கால் தூர்வாரப்பட்டு தயாராக உள்ளது -அமைச்சர் நேரு பேட்டி

நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் நேரு இன்று (29.04.2023) நீர்வளத்துறையின் சார்பில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகளை திருச்சி பஞ்சப்பூர் அருகில் உள்ள கே.சாத்தனூர் கிராமம் கோரையாற்றில் தூர் வாரும் பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு...... திருச்சி மாநகராட்சி நூறு பணிகள் 375.78 கிலோமீட்டர் தூரத்தில் ரூ 15.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டத்தில் மீதமுள்ள 7 கிலோமீட்டர் தூரத்திற்கு

ரூ21.5 லட்சம் மதிப்பில் தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக 378 கிலோமீட்டர் தூரம் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு மேட்டூர் அணை திறப்பிற்கு முன் திருச்சி மாவட்டத்தில் தயாராக உள்ளதாக அமைச்சர் நேரு தெரிவிதத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் , சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், பழனியாண்டி, ஸ்டாலின் குமார், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் சொர்ணகுமார்,

செயற்பொறியாளர்கள் நித்தியானந்தன், தமிழ்ச்செல்வன், வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம், நகர பொறியாளர் சிவபாதம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn