திருச்சி போக்குவரத்து துறை துணை ஆணையர் அறையில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை

திருச்சி போக்குவரத்து துறை துணை ஆணையர் அறையில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை

போக்குவரத்து துறையில் திருச்சி மாவட்ட துணை போக்குவரத்து ஆணையராக பணிபுரிந்து வருபவர் அழகரசு. இவர் திருவண்ணாமலையில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்து பதவி உயர் பெற்று திருச்சி மாவட்டத்திற்கு பணியிடமாறுதலானார்.

தற்பொழுது திருச்சி வட்டாரம் போக்குவரத்து பிராட்டியூர் அலுவலகத்தில் போக்குவரத்து மாவட்டத் துணை ஆணையராகம் பொறுப்பு வட்டாரப் போக்குவரத்து அலுவலராக கடந்த ஒரு வருடமாக பணியாற்றி வருகிறார்

இந்நிலையில் திருவண்ணாமலையில் பணியாற்றிய காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக இரண்டு கோடிக்கும் மேல் சொத்து சேர்த்ததாக இவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக இவர் குடியிருக்கும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் வில்லியம் சாலையில் உள்ள அகிலா மேன்சனில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர் பாலமுருகன் சோதனை செய்து வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO