பைக் மோதி அரசு பேருந்து ஓட்டுநர் பலி

பைக் மோதி அரசு பேருந்து ஓட்டுநர் பலி

திருச்சி மாவட்டம் முசிறி பைத்தம்பாறை பகுதியை சேர்ந்தவர் நேசகுமார் (48). இவர் துவாக்குடி டெப்போவில் அரசு பஸ்ஸில் டிரைவராக கடந்த 15 வருடங்களாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று காலை திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்தை, நேசகுமார் துவாக்குடி அடுத்த தேநீர்பட்டிக்கு ஓட்டி வரும் பொழுது சிற்றுண்டி சாப்பிடுவதற்காக துவாக்குடி பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டு

ஓட்டுநர் நேசகுமாரும், நடத்துனர் செந்தில்குமாரும் துவாக்குடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து எதிரே உள்ள டிபன் கடைக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றனர். அப்போது திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி அதிவேகமாக வந்த பைக் நேசகுமார் மீது மோதியது. இந்த விபத்தில் ஓட்டுநர் நேசக்குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பைக்கை ஓட்டி வந்த லால்குடி பகுதியை சேர்ந்த விக்னேஷ் (32) படுகாயம் அடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த துவாக்குடி போலீசார் அரசு பேருந்து ஓட்டுநர் நேசகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision