ரெயிலில் பெண் தவறவிட்ட தங்கச்சங்கிலியை ஒப்படைத்தவருக்கு பாராட்டு

ரெயிலில் பெண் தவறவிட்ட தங்கச்சங்கிலியை ஒப்படைத்தவருக்கு பாராட்டு

திருச்சி காட்டூர் கோகுல நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திர சேகரன் (வயது 63). இவர் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனது குடும்பத்துடன் பயணம் செய்தார். அப்போது அவரது மகளின் தங்கச்சங்கிலி தொலைந்து விட்டது. இது குறித்து அவர் திருச்சி ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் அதே ரெயிலில் பயணம் செய்த மணப்பாறை ரெட்டியாபட்டியை சேர்ந்த சேவி (53) என்பவர், அந்த தங்கச்சங்கிலியை கண்டெடுத்து ரெயில்வே போலீசிடம் ஒப்படைத்தார். இதையடுத்து அந்த தங்கச்சங்கிலி சந்திரசேகரனிடம் ஒப்படைக்கப்பட்டது.

சங்கிலியை ஒப்படைத்த சேவியை போலீசார் பாராட்டினர். சேவி, ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn