தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா பறிமுதல் செய்து கடத்தியவர் கைது

திருவெறும்பூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா பொருட்களை மினி லோடு வேனில் கடத்திய வரை கைது செய்ததோடு மினி வேன் மற்றும் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 421 கிலோவை அரியமங்கலம் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சி அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்க்கு லோடு ஆட்டோவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா பொருட்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் அந்த அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகம் படும்படியாக வந்த லோடு ஆட்டோவை மறித்து சோதனை செய்தபோது அதில் கூலிப் மற்றும் ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் இருப்பது தெரியவந்தது அதன் அடிப்படையில் அந்த வேனை பறிமுதல் செய்ததோடு டிரைவரிடம் விசாரணை செய்த போது அரியமங்கலம் நேருஜிநகரை சேர்ந்த கணேசன் மகன் சுரேஷ்குமார் (31) என்றும் அவர் ஏற்றி வந்த குடோனை காட்டி உள்ளார்.
அதன் அடிப்படையில் குடோன் உள்ளே அதிரடியாக ரமேஷ் தலைமையிலான போலீசார் சோதனை செய்த போது குடோன் உள்ளிருந்து 260 கிலோ ஹான்ஸ், 27 கூலிப் , 130 கிலோ விமல் பாக்கு, 4 கிலோ பான்பராக் என மொத்தம் 421 கிலோ மறைத்து வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர்.மேலும் இது சம்பந்தமாக இந்த குடோனில் மறைத்து வைத்திருந்த பொருட்களின் உரிமையாளரான லால்குடி அருகே உள்ள தாளக்குடியை சேர்ந்த இளையராஜா (40) என்பவரை தேடி வருகின்றனர்.
மேலும் போலீசார் பறிமுதல் செய்த குட்கா பான் மசாலாவின் மதிப்பு ஒரு லட்சத்து 62 ஆயிரம், மற்றும் செல்போன் ரூ 2000 ஆகும். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision