காணாமல் போன மாணவர் கிணற்றில் பிணமாக மிதப்பு.

காணாமல் போன மாணவர் கிணற்றில் பிணமாக மிதப்பு.

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் சீகம்பட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் செல்வம் என்ற அடைக்கண். இவருக்கு இரண்டாவது மனைவியின் மகனான தரணீஸ்வரன் (19). இவர் மணப்பாறை அடுத்த மஞ்சம்பட்டி பகுதியில் தனியார் ஐடிஐ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஐடிஐ-லிருந்து உடல்நிலை சரியில்லை என்ற காரணம் கூறி வீட்டிற்கு வந்தவர் வீட்டிற்கு செல்லவில்லை. இந்நிலையில் தரணீஸ்வரன் காணவில்லை என மனப்பாறை காவல் நிலையத்தில் செல்வம் புகார் கொடுத்த நிலையில், போலீசார் கடந்த இரண்டு நாட்களாக தரணிஸ்வரனை தேடி வந்துள்ளனர்.

சீகம்பட்டி அருகே தனியார் ஒருவருக்கு சொந்தமான தோட்ட கிணற்றில் தரணிஸ்வரன் இன்று காலை இறந்த நிலையில் பிணமாக மிதந்துள்ளார். தகவல் அளித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மனப்பாறை போலீசார் மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மாணவன் இறப்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவன் தற்கொலை செய்து கொண்டானா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision