தேசிய வாக்காளர் தின பகுதி சபா கூட்டம்

தேசிய வாக்காளர் தின பகுதி சபா கூட்டம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 5 வது மண்ட லத்துக்குட்பட்ட 27 வது வார்டு ஆட்டுமந்தை தெரு, உடற்பயிற்சி கூடம் அருகில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்திற்கு மேயர் மு.அன்பழகன் தலைமை வகித்து உதவி ஆணையர் வெங்கட்ராமன் முன்னிலையில் பொது மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். 

இந்தக் கூட்டத்தில் , ஆட்டுமந்தை தெரு , ஆப்பகாரத் தெரு வள்ளுவர் தெரு,பிஷப் குல தெரு, சவேரியார் கோவில் தெரு , புத்தூர் பாத்திமா தெரு, வி. என். பி. தெரு, மீன்கார தெரு, பெருமாள் கோவில் தெரு , முலைக் கொல்லை, தென்னூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பல் வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை மேயரிடம் அளித்தனர். பொதுமக்கள் அளித்த 46 மனுக் கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என மேயர் தெரிவித்தார். முன்னதாக மேயர் மு. அன்பழகன் 27 வது வார்டு பகுதிகளுக்கு முடிவுற்ற திட்ட பணிகளையும், நலத்திட்டங்களையும்மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்ட பணிகளையும் பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தார். 

 திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 65 வார்டு பகுதிகளிலும் துணை மேயர், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், நகரப் பொறியாளர், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் அந்தந்த வார்டுக்கு உட்பட்ட பகுதி சபா கூட்டம் நடைபெற்று பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றனர். தகுதியுள்ள மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... 

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision