திருச்சி அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து - 8 பேர் காயம்

திருச்சி அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து - 8 பேர் காயம்

திருச்சி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து - 8 பேர் காயம்

சென்னையில் இருந்து கம்பம் நோக்கி 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பேருந்து திருச்சி வழியாக சென்று கொண்டிருந்தது. அதிகாலை திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த மரவனூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் சாலை ஓரத்தில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 8 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்கம்பத்தில் பேருந்து மோதியதில் மின்கம்பம் பாதி சாய்ந்த நிலையில் உள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகளிடம் மணப்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.