திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கைது

திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கைது

திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜீயபுரம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த ஆட்டோவில் ஐந்து பேர் இருந்தனர். அவர்களை இறக்கி விட்டு ஆட்டோவை சோதனையிட்டனர்.

அதில் அரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவர்களை அழைத்து காவல் நிலையத்திற்கு சென்றனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஸ்ரீரங்கம் கிழக்கு வாசலை சேர்ந்த மகேஸ்வரன் (23), ஸ்ரீரங்கம் காவடிக்கார தெருவைச் சேர்ந்த அஜித் என்கின்ற அஜித்குமார் (25), சத்தியராஜ் (38), மாதவன் (22), சதீஷ்குமார் என்பது தெரியவந்தது.

இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசாருக்கும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் வேறு ஏதும் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட சென்றார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision