திருச்சி மத்திய சிறையில் கண் மருத்துவ பரிசோதனை முகாம்

திருச்சி மத்திய சிறையில் கண் மருத்துவ பரிசோதனை முகாம்

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு கண் மருத்துவ பரிசோதனை முகாம் தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை கண் மருத்துவர் கொண்ட மருத்துவ குழுவினர்களால் இன்று மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதில் 94 சிறைவாசிகள் மற்றும் மத்திய சிறையில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதில் 88 பேர் பயனுடைந்தனர். மருத்துவ பரிசோதனை முகாமை திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள் தலைமையில் இந்திய சிறை பணிகள் நிறுவனம் ஏற்பாடு செய்தனர்.