ஓயாமரி நவீன எரிவாயு தகன மையம் தற்காலிகமாக மூடல் - மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

ஓயாமரி நவீன எரிவாயு தகன மையம் தற்காலிகமாக மூடல் -  மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஓடத்துறை பகுதியில் செயல்பட்டு வரும் ஓயாமரி எரிவாயு தகன மையத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சீர் செய்திட (30.08.2023) முதல் (07.09.2023) வரை பணிகள் நடைபெற உள்ளது.

மேற்கண்ட மையத்தில் சடலங்கள் தகனம் செய்யும் பணி மேற்கொள்ள இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஓயாமரி நவீன எரிவாயு தகன மையத்தினை தற்காலிகமாக மூடுவதாகும் அதற்கு பதிலாக ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரில் உள்ள நவீன எரிவாயு தகன மையத்தினை பயன்படுத்திக் கொள்ள பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision