திருச்சி மாவட்டத்தில் (24.08.2023) மற்றும் (27.08.2023) ஆகிய நாட்களுக்கு தடை - மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் (24.08.2023) மற்றும் (27.08.2023) ஆகிய நாட்களுக்கு தடை - மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வருகை தந்து, சாலை மார்க்கமாக திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு செல்ல உள்ளார்.

இதனால் (24.08.2023) மற்றும் (27.08.2023) ஆகிய இரண்டு நாட்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பயணம் செய்யும் சாலைகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. 

எனவே (24.08.2023) மற்றும் (27.08.2023) ஆகிய இரு தினங்களில் தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision