சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை விவரம்

சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை விவரம்

தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில். தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றி உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

அவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை கோவில் நிர்வாகம் சார்பில் மாதம் இருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி கோவில் இணை ஆணையர் முன்னிலையில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணியதில் ரூ.ஒரு கோடியே 5,லட்சத்து 84, ஆயிரத்து 57ரூபாய் ரொக்கம், 2, கிலோ 244, கிராம் தங்கம், 2, கிலோ 809,கிராம் வெள்ளி மற்றும் 209, அயல்நாட்டு நோட்டுகள், 320, அயல் நாட்டு நாணயங்கள் காணிக்கையாக கிடைத்த ன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision