சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் - போக்சோ வழக்கில் கைது

சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் - போக்சோ வழக்கில் கைது

திருச்சி மாவட்டம். இலால்குடி காவல் நிலைய குற்ற எண். 422/22 ச.பி. 147. 148,302 இதச., என்ற கொலை வழக்கில் 1) ஸ்டீபன் ஆரோக்கியராஜ் (சிறுகனூர் காவல் நிலைய ரவுடி சரித்திர பதிவேடு எண். 20/15, பிரிவு ஏ). அண்ணா நகர், புறத்தாக்குடி, மண்ணச்சநல்லூர் தாலுகா என்பவரும், 2) மதி என்ற மதியழகன் (50). த.பெ. மாணிக்கம், மாந்துறை, இலால்குடி தாலுக்கா, என்பவரும் 1-வது மற்றும் 2-வது எதிரியாக உள்ளனர். மேற்படி வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் இருந்த போது, மதி என்ற மதியழகன் மட்டும் ஜாமீனில் வெளியே வந்துவிட்ட நிலையில், ஸ்டீபன் ஆரோக்கியராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டம் பதிவு செய்யப்பட்டிருந்ததால் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

2) இந்நிலையில், மேற்படி ஸ்டீபன் ஆரோக்கியராஜ் சிறையில் இருந்தபோது மேற்படி மதி என்ற மதியழகன், ஸ்டீபன் ஆரோக்கியராஜ்-வை ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே எடுப்பதற்காக ஸ்டீபன் ஆரோக்கியராஜ் வீட்டிற்கு அவ்வப்போது சென்று வந்த நிலையில், கடந்த (02.07.2023)-ஆம் தேதி மதியம் 12:00 மணியளவில் ஸ்டீபன் ஆரோக்கியராஜ்-வின் மகன் (பாதிக்கப்பட்டவர், வயது -11) தனது வீட்டில் தனியாக இருந்த போது மேற்படி மதி என்ற மதியழகன் பாதிக்கப்பட்ட சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார்.

3. இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் அளித்த புகாரின் பேரில் இலால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண். 21/23, ச.பி. 5(m) r/w 6(i) of POCSO Act ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரி மதி என்ற மதியழகன் (20.11.2023) - ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision