திருச்சியில் ஒருநாள் மட்டும் டாஸ்மாக் விடுமுறை - மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

திருச்சியில் ஒருநாள் மட்டும் டாஸ்மாக் விடுமுறை - மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

2023-ம் ஆண்டு மே 1 (திங்கட்கிழமை) மே தினத்தினை முன்னிட்டு அன்றைய தினம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், (FL1) மூடப்பட்டிருக்கும், அதனுடன் இணைந்து இயங்கும்

மதுக் கூடங்கள் மற்றும் FL2/FL3/FL3A/FL3AA & FL11 வரையிலான ஹோட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும். மேலும், அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும்.

மீறினால் கடுமையான நடவடிக்கை எடுககப்படும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn