திருச்சியில் நாளை (16.02.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சியில் நாளை (16.02.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி சிறுகமணி துணை மின் நிலையத்தில் நாளை (16.02.2023) (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை (16.02.2023) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறுகமணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பழங்காவேரி,

வள்ளுவர்நகர், காமநாயக்கன்பாளையம், காவல் காரபாளையம், சிறுகமணி, பெருகமணி, அந்தநல்லூர், ஜீயபுரம் மெயின்ரோடு, அனலை, திருப்பராய்த்துறை, எலமனூர், கொடியாலம், அம்மன்குடி, முக்கொம்பு ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.

இதேபோல் பெட்டவாய்த்தலைதுணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (16.02.2023) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெட்டவாய்த்தலை, பழங்காவேரி, பாளையூர்மேடு, தேவஸ்தானம், நங்கவரம், கோட்டையர்தோட்டம், குமாரமங்கலம், குளித்தலை, பொய் யாமணி, நச்சலூர், தளிஞ்சி, சிறுகாடு, சங்கியாண்டபுரம்,

எஸ்.புதுக்கோட்டை, சிறுகமணி, பெருகமணி, சோழவந்தான் தோப்பு, திருமுருகன்நகர், காந்திபுரம், இனுங்கூர், சுக்காம் பட்டி, பாதிவயல்காடு, மாடுவிளுந்தான்பாறை, கவுண்டம் பட்டி, குறுச்சி, பாறைப்பட்டி, பங்களாபுதூர், கணேசபுரம், நடைபாலம், பணிக்கம்பட்டி ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.

இதேபோல் மணிகண்டம் துணை மின் நிலையத்தில் நாளை (16.02.2023) (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி தென்றல் நகர், முடிகண்டம், நேருஜி நகர், மலர் நகர், நாகமங்கலம், மணிகண்டம், செங்குறிச்சி, மேக்குடி, ஆலம்பட்டி, பாகனூர், தீரன்மாநகர்,

மாத்தூர், எசனப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை (16.02.2023) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn