டாடா டெக்னாலஜிஸ் டிசம்பர் 5ம் தேதி யோகக்காரர் யார் ?

டாடா டெக்னாலஜிஸ் டிசம்பர் 5ம் தேதி யோகக்காரர் யார் ?

சுமார் இருபதாண்டுகளுக்குப்பின் டாடா குழுமங்களில் இருந்து வரும் மிகப் பெரியது ஐ.பி.ஓ, பொதுச் சந்தாவுக்கான முதன்மை சந்தையில் அறிமுகமாக உள்ளது. சந்தையில் டாடா குழுமத்தின் ஆரம்ப பங்கு விற்பனையில் பெரும் ஆர்வம் உள்ளது, இது கட்டுப்பாடற்ற சந்தையில் உயரும் டாடா டெக்னாலஜிஸ் கிரே மார்க்கெட் பிரீமியம் (ஜிஎம்பி) விலையிலும் தெளிவாகத் தெரிகிறது. டாடா குழுமம் அடுத்த வாரம் மிகவும் பரபரப்பான அறிமுகத்திற்கு முன்னதாக, விலைப்பட்டியல், வெளியீட்டு சலுகை தேதி, மற்றவற்றுடன் அளவு ஆகியவற்றை நிர்ணயித்துள்ளது.

நேற்றைய தினம் திறக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் டாடா பங்குகள் விற்பனையை கொண்டி தீர்த்தனர். இந்தியாவின் முன்னணி தொழிற் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமம், தன் டாடா டெக்னாலஜி லிமிடெட் பிரிவின் பொதுப் பங்கு வழங்கலை நேற்று முன் வைத்தது. பங்குச் சந்தையில் டாடா டெக்னாலஜிஸ் பங்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தது.

குறிப்பாக சில்லறை முதலீட்டாளர்கள் பகுதி 1.98 மடங்கும், நிறுவனமற்ற முதலீட்டாளர்கள் பகுதி 2.13 சதவீதமும் செலுத்தப்பட்டிருந்தது. சில்லறை முதலீட்டாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியைவிட 1.35 மடங்கு சந்தா கூடுதலாக செலுத்தியுள்ளனர். இதன்வழியாக, ஒட்டு மொத்த டாடா டெக் னாலஜிஸ் பங்குகளும் பொது வழங்கலைவிட 1.60 மடங்கு கூடுதலாக செலுத்தப்பட்டது. அதிலும், வெளியீடு செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில், பங்குகள் விற்றுத் தீர்ந்ததால், முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்தனர். டிசம்பர் ஐந்தாம் தேதி சந்தையில் பட்டியலிடப்படுகிறது. டாடா டெக்னாலஜீஸ் பங்குகள் கிடைத்தால் யோகக்காரதான் நீங்கள் !.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision