மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கிய காங்கிரஸ் கட்சியினர்

மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கிய காங்கிரஸ் கட்சியினர்

சத்திஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய நான்கு மாநில சட்டசபை தேர்தல் கடந்த மாதம் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 

இதனை முன்னிட்டு திருச்சியில் காங்கிரசார் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். மாநகர, மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில், மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கட்சி அலுவலகமான அருணாச்சல மன்றத்தின் வாசலில் பட்டாசுகளை வெடித்து, அந்த வழியாக வந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் வக்கீல் சந்திரன், மாநில செயலாளர் ஜி. கே.முரளி, கோட்டத்தலைவர் பிரியங்கா பட்டேல், மகிளா காங்கிரஸ் தலைவர் ஷீலா செலஸ், இளைஞர் காங்கிரஸ் மணிவேல் அண்ணாதுரை, மனித உரிமை பிரிவு ஜெயம் கோபி, ஐடி & மீடியா அணி லோகேஸ்வரன், விஜய் பட்டேல், கலை பிரிவு ராகவேந்திரா, தெற்கு மாவட்ட துணை தலைவர் எழிலரசன், ஓபிசி அணி பகதூர்ஷா நூர் அகமது உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய..

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision