ரயில் முன்பு நின்று தம்பி தற்கொலை - காப்பாற்ற முயன்ற அண்ணன் படுகாயம்

ரயில் முன்பு நின்று தம்பி தற்கொலை - காப்பாற்ற முயன்ற அண்ணன் படுகாயம்

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள வடக்கு தாரானூர் பகுதியை சேர்ந்த கந்தவேல் மகன் ஆனந்த் (24) இவர் கூலி வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று லால்குடி அருகே உள்ள டாஸ்மார்க் கடையில் மது பாட்டில் வாங்கி ஆனந்த் ரயில்வே மேம்பாலம் பகுதியில் மது அருந்தியுள்ளார். 

பின்னர் ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த ஆனந்தை காப்பாற்றுவதற்காக அவரது அண்ணன் கார்த்திக் (26) முயற்சி செய்தார். அப்போது குருவாயூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற குருவாயூர் அதிவிரைவு ரயில் மோதியதில் ஆனந்த் மற்றும் கார்த்திகேயன் மீது மோதி தூக்கி வீசியது. இதில் கார்த்திக்கு லேசான காயங்களோடு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரது தம்பி ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதனை அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆனந்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து ஆனந்த் ரயில் முன்பு நின்று தற்கொலை செய்து கொண்டது குறித்து ரயில்வே போலீசார் மற்றும் லால்குடி போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவரது அண்ணன் கார்த்திக் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision