எம்எல்ஏ-வை சாரட் வண்டியில் அமர வைத்த அழைத்து வந்த பொதுமக்கள்

எம்எல்ஏ-வை சாரட் வண்டியில் அமர வைத்த அழைத்து வந்த பொதுமக்கள்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே மேல சீதேவிமங்கலம் கிராமத்தில் புதிதாக அங்கன்வாடி மையம் வேண்டுமென அப்பகுதி மக்கள் மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையின் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 2021 - 22 ஆம் ஆண்டிற்கான நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தினை திறந்து வைக்க வருகை தந்தார்.

அப்போது இந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருசக்கர வாகனங்களுக்கு முன்புறமாக ஊர்வலமாகவும் அதனை தொடர்ந்து இரட்டை வெள்ளை குதிரை சாரட்டு வண்டியில் அமர்ந்து வந்து மேளதாளங்கள் முழங்க அழைத்து வரப்பட்டார். பின்னர் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த அவர்,

பிச்சாண்டர் கோயில் ஊராட்சியில் உள்ள டோல்கேட் பகுதியில் எம் எல் ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 7.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட புது கழிவறையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எம்எல்ஏ கதிரவன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் ஒன்றிய கழக, பேரூர் கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision