திருச்சி மாவட்டத்தில் நாளை (31.10.2023) ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

திருச்சி மாவட்டத்தில் நாளை (31.10.2023) ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை (31.102023) (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் தூய்மை பணியாளர்களுக்கு கிராம சபை மூலம் பாராட்டு தெரிவித்தல், கிராம ஊராட்சிகளில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கவுரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுதல்

இணைய வழியாக வீட்டுவரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி மற்றும் தொழில் உரிம கட்டணம், மனைப்பிரிவு அங்கீகாரம் மற்றும் கட்டிட அனுமதியை நடைமுறைப்படுத்துவது குறித்து விளக்கப்படுகிறது. 

எனவே இதில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision