அரிவாளை காண்பித்து பணத்தை பறித்து சென்ற ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

அரிவாளை காண்பித்து பணத்தை பறித்து சென்ற ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருச்சி மாநகர காவல் ஆணையர் N.காமினி, உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையிலும், ஆயுதங்களை காண்பித்து பணத்தை கொள்ளையடிக்கும் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கியுள்ளார்.

அதன்படி, கடந்த (07.10.23)-ந் தேதி காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வரகனேரி குழுமிக்கரையில் உள்ள டீக்கடை அருகில் வாரக்குழுவிற்கு செலுத்த வைத்திருந்த பணம் ரூ.3000/-த்தை அரிவாளை காண்பித்து பறித்து சென்றதாக கொடுத்த புகாரின்பேரில் பிள்ளைமாநகர், எடத்தெருவை சேர்ந்த ரவுடி சரவணபிரபு @ பிரபு (29), த.பெ. மணி என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ரவுடி சரவணபிரபு @ பிரபு என்பவர் மீது காந்திமார்க்கெட் காவல்நிலையத்தில் ஆயுதங்களை காண்பித்து பணம் பறித்து சென்றதாக 04 வழக்குகளும், கஞ்சா விற்பனை செய்ததாக ஒரு வழக்கும், கொலை முயற்சி செய்ததாக ஒரு வழக்கு உட்பட 6 வழக்குகள் உள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.

எனவே, எதிரி சரவணபிரபு @ பிரபு என்பவர் தொடர்ந்து ஆயுதங்களை காண்பித்து பணத்தை பறித்து செல்லும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக விசாரணையில் தெரியவந்ததால், மேற்கண்ட எதிரியின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு காந்திமார்க்கெட் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் N.காமினி, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் திருச்சி மாநகரில் ஆயுதங்களை காண்பித்து வழிப்பறி செய்வோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision