திருச்சி பிரபல கல்லூரி பேருந்து விபத்து - 10 மாணவர்கள் காயம் - சிக்கிய ஓட்டுநர்

திருச்சி பிரபல கல்லூரி பேருந்து விபத்து - 10 மாணவர்கள் காயம் - சிக்கிய ஓட்டுநர்

திருச்சி ராம்ஜிநகர் அடுத்த கேர் கல்லூரி பேருந்து இன்று மாலை கல்லூரியில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு திருச்சி மாநகரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்பொழுது ராம்ஜி நகர் புங்கனூரில் இருந்து ரேஷன் பொருட்களை ஏற்றி வந்த லாரி குறுக்கே வந்ததால் கல்லூரி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் எதிர்ப்புறம் சென்று விபத்துக்குள்ளானது.

இதில் 10 மாணவர்கள் காயம் அடைந்தனர். மேலும் உணவு பொருள் ஏற்றி வந்த லாரி திடீரென பிரேக் பிடித்ததால் லாரியில் இருந்த அரிசி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் சாலையில் சிதறி கிடந்தன. இதனை கண்ட பகுதி மக்கள் உடனடியாக பேருந்தில் இருந்த மாணவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் கல்லூரி பேருந்து ஓட்டுநர் சிக்கிக்கொண்டதால் திருச்சி கன்டோண்மென்ட் தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து அவரை ஒரு மணி நேரம் போராடி மீட்டனர். கல்லூரி பேருந்து ஓட்டுனரின் கால் முறிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து ராம்ஜி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision