திருச்சி காட்டூர் அழகு முத்துமாரியம்மன் கோவில் திருவிழா ஜல்லிக்கட்டு போட்டி

திருச்சி காட்டூர் அழகு முத்துமாரியம்மன் கோவில் திருவிழா ஜல்லிக்கட்டு போட்டி

திருச்சி தெற்கு காட்டூர் சார்பில் மாநகராட்சி 39 வது வார்டுக்கு உட்பட்ட காட்டூர் பாலாஜி நகர் விரிவாக்க பகுதியியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த விழாவிற்கு லால்குடி ஆர்டிஒ வைத்தியநாதன் தலைமை வகித்து ஜல்லிகட்டு போட்டியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ் முன்னிலையில் வகித்தார்.

இந்த ஜல்லிக்கட்டு விழாவில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், தஞ்சை, அரியலூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 750 மாடுகளும் 350 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இதில் முதல் மாடாக அழகுமுத்துமாரியம்மன் கோவில் மாடு அவிழ்த்துவிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து மற்ற மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் வெற்றி பெறும் மாடு பிடி வீரர்களுக்கு மாட்டின் உரிமையாளர்களுக்கும் விழா கமிட்டி சார்பில் சைக்கிள், சோபா செட், டிரஸ்சிங் டேபிள், உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.

சிறந்த மாட்டின் உரிமையாளருக்கும் மாடுபிடி வீரருக்கும் முதல் பரிசாக  பைக் வழங்கப்படுகிறது. கால்நடை இணை இயக்குனர் எஸ்தர் ஷீலா தலைமையில் கால்நடை உதவி இயக்குனர் மகேஷ் மற்றும் குழுவினர் கால்நடைகள் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தகுதி உடையாதா என்பது குறித்து ஆய்வு செய்து இந்தனர்.

மருத்துவ அலுவலர்கள் வாக்ருதீன் விஜய் ஆகியோர் தலைமையில் மாடுபிடி வீரர்கள் பரிசோதனை மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கு ஆர்டி ஒவைத்தியநாதன் தலைமையில் ஜல்லிகட்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர். திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் 180போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருவெறும்பூர் அருகே நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும், மருத்துவ குழுவினருக்கும் உரிய பாதுகாப்பு இல்லை என குற்றசாட்டு எழுந்து உள்ளது.

ஜல்லிகட்டு போட்டியில் பேரி காடுகள் 80 மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட வேண்டும் என்றும், இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் ஜல்லிகட்டு வீரர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். ஆனால் இங்கு 20 மீட்டர் தூரம் மட்டுமே பேரிகாடு அமைக்கப்பட்டு உள்ளது. அதும் சரியாக கட்டப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கும் வீரர்களுக்கும் போதிய பாதுகாப்பு இல்லை.

மேலும் ஜல்லிகட்டு போட்டியில் காயம் அடைந்தவர் சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழுவினருக்கும் போதிய பாதுகாப்பு இல்லை என புலம்பல். ஜல்லிக்கட்டு விழாவில் உள்ளூர் மாடுகளுக்கு அனுமதிக்காமல், வெளியூர் மற்றும் வெளிமாவட்ட ஜல்லிகட்டு காலைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக உள்ளூர் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடத்திற்கு உரிமையாளரிடம் முறையான அனுமதி பெறவில்லை என்று மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை நடைபெறும் பகுதிக்கு சொந்தமான பாப்பா குறிச்சி, கீதாபுரம், காந்திபுரம், வீதி வடங்கம், மஞ்சத்திடல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாட்டின் உரிமையாளர்களுக்கு ஜல்லிக்கட்டு குழுவினர் டோக்கன் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

அதனால் தங்கள் பகுதியில் மாடுகள் வரக்கூடாது என வெளியூரில் இருந்து ஜல்லிக்கட்டு மாடுகளை ஏற்றி வரும் வாகனங்களை மறித்து உள்ளூர் காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் விரைந்து சமரசம் செய்து வந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிரடியாக ஜல்லிக்கட்டுவாடிவாசல் பகுதியை அதிரடியாக முற்றுகையிட்டு ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்துமாறு கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததோடு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தை சேர்ந்த தொழிலதிபர் திருவெறும்பூர் அருகே தெற்கு காட்டூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவிற்கு பல ஆயிரம் மதிப்பு உள்ள ட்ரெஸ்ஸிங் டேபிள், கட்டில்  பீரோ  உள்ளிட்ட பரிசு பொருள்களை நன்கொடையாக வழங்கியதாகவும் ஆனால் அவருக்கே ஒரு டோக்கன் கூட வழங்க வில்லை வேதனையுடன் கூறினார். ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் மாட்டின் உரிமையாளர்கள் நான்கு பேர் காயமடைந்தனர். இதில் வேங்கூரை சேர்ந்த மோகன் (17), ரமேஷ் (25) ஆகிய இரண்டு பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn