திருச்சி சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை விபரம்

திருச்சி சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை விபரம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (30.09.2023) உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.

இதில் ரூ.45 லட்சத்து 3 ஆயிரத்து 27 ரொக்கமும், 1 கிலோ 17 கிராம் தங்கமும், 1 கிலோ 390 கிராம் வெள்ளியும், 42 வெளிநாட்டு கரன்சிகள், 334 வெளிநாட்டு நாணயங்கள இருக்கப்பெற்றன.

உண்டியல் திறப்பில் கலந்துக் கொண்டவர்கள் விவரம் : 

1. சி.கல்யாணி, இணைஆணையர் / செயல் அலுவலர்.

2. இரா. ஹரிஹரசுப்பிரமணியன், உதவி ஆணையர்/ நகை சரிபார்ப்பு அலுவலர் இரட்டை பூட்டு அலுவலர் (கூடுதல் பொறுப்பு) 

3. திருக்கோயில் கண்காணிப்பாளர்கள்/ செயல் அலுவலர்கள், இத்திருக்கோயில்

4. நா.சீனிவாசன், ஆய்வாளர், இந்து சமய அறநிலையத்துறை, மண்ணச்சநல்லூர்

5. திருக்கோயில் பணியாளர்கள், இத்திருக்கோயில். 

6. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision