திருச்சி புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் பெயர் வைக்க மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை

திருச்சி புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் பெயர் வைக்க மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை

மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மாமன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக மாநகராட்சி அலுவலக நுழைவாயில் பகுதியில்

கருப்பு சட்டை அணிந்து SAVE MANIPUR என்ற பதாகைகளை ஏந்தி மணிப்பூர் மாநில பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும், மணிப்பூர் அரசு பதவி விலக வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பியதுடன், கருப்பு சட்டை அணிந்து மாமன்ற கூட்டத்தில் பங்கேற்றனர்.

திருச்சியில் புதிதாக அமைய உள்ள பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் வைக்க வேண்டும் என்றும், திருச்சி தெப்பக்குளம் கோட்டை நுழைவாயிலுக்கு அன்பில் தர்மலிங்கம் பெயர் சூட்ட வேண்டும் என்று திருச்சி மாநகராட்சி மண்டலம் 3 தலைவர் மதிவாணன் கோரிக்கை முன்வைத்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn