விடை பெற்றார் விஜயலெட்சுமி சீறிய சீமான் ! அடுத்த ஆட்டம் ஆரம்பம் !!

விடை பெற்றார் விஜயலெட்சுமி  சீறிய சீமான் ! அடுத்த ஆட்டம் ஆரம்பம் !!

திமுக அரியணை ஏறி கிட்டத்தட்ட 28 மாதங்களை நிறைவு செய்துவிட்டது. இந்நிலையில் ஈடி, சிபிஐ, அமைச்சர்கள் மீதான தொடர் ரெய்டு காரணமாக துவண்டு இருந்த நிலையில், அவற்றை சரி செய்ய சீமான் மீதான வழக்கை தூசிதட்டி வீரலெட்சுமியை வைத்து விஜயலெட்சுமி மூலம் சீமானை சிக்க வைக்க முயற்ச்சி மேற்கொண்ட நிலையில் சனாதன சர்ச்சை எழுந்து அதில் தொய்வு ஏற்பட்ட நிலையில் தற்பொழுது விஜயலெட்சுமி கிரேட் எஸ்கேப்...

இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது... வீரலட்சுமி என்பவரது வீட்டில் இருந்து வெளியேறிய விஜயலட்சுமி தனது சகோதரியுடன் வேறொரு இடத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில் மேலும் நியாயம் கிடைக்கும் என வந்த தன்னை பயன்படுத்தி கொண்டதால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆனதாக நடிகை விளக்கம் அளித்துள்ளார் இதனிடையே நேற்றிரவு வளசரவாக்கம் காவல்நிலையம் வந்த விஜயலெட்சுமி தன்னுடைய புகார் மனுவை வாபஸ் பெற்றார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் சீமானை யாரும் எதுவும் செய்ய முடியாது மாபெரும் சக்திவாய்ந்தவராக இருக்கிறார். காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை தனிஒருவராக போராட முடியவில்லை. சீமானை எதிர்கொள்ள யாரும் எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் இருந்து கிடைக்கவில்லை புகார் மீதான நடவடிக்கையில் முன்னேற்றம் இல்லை, தொய்வு இருந்தது வழக்கை வாபஸ் பெற யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை புகார் மனு விவகாரத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டு புகாரை வாபஸ் பெறுவதாகவும், மீண்டும் பெங்களூருவுக்கே புறப்படுகிறேன் என அவர் கூறினார்.

ஆனால் விபரம் அறிந்தவர்களோ தற்பொழுதைக்கு இடைவெளி விட்டிருக்கிறார்கள், மீண்டும் எவரேனும் விஜயலெட்சுமியை தூண்டிவிட்டால் மீண்டும் இந்த சர்ச்சை தொடரும் என்கிறார்கள். அதுவும் சரிதான் தேர்தலுக்குத்தான் இன்னும் ஆறு மாத காலம் இருக்கிறதே.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision