திருச்சியில் (07.12.2023) வாகனங்கள் பொது ஏலம்

திருச்சியில் (07.12.2023) வாகனங்கள் பொது ஏலம்

திருச்சி மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 126 இருசக்கர வாகனங்களை அரசுடமை ஆக்குவதற்கு மாவட்ட அரசிதழில் மே 13, 2023 அன்று ந.க.எண் : டி4-798089-23-ன்படி செய்தி வெளியிடப்பட்டது. மேற்படி 126 வாகனங்களை இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. எனவே, மாவட்ட வருவாய் அலுவலர், திருச்சி மாவட்டம் அவர்களால் மேற்படி 126 வாகனங்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

மேற்படி வாகனங்களின் பொது ஏலம் வருகின்ற (07.12.2023) ஆம் தேதி காலை 10:00 மணியளவில் திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் (05.12.2023) மற்றும் (06.12.2023) ஆகிய தேதிகளில் 10:00 மணி முதல் மாலை 05:00 மணிவரை திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம்.

மேலும் காவல் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான (07.12.2023) காலை 08:00 மணிமுதல் 10:00 மணிவரை தங்களது ஆதார் அட்டையுடன் ரூபாய் 5000/-முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலம் எடுத்த உடன் சரக்கு மற்றும் சேவை வரியாக இரு சக்கர வாகனத்திற்கு 12% GST தொகையை செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் N.காமினி தெரிவித்துள்ளார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய..

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision