திருச்சியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 சிறுமிகள் உட்பட 4 பேர் பலி

திருச்சியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 சிறுமிகள் உட்பட 4 பேர் பலி

திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. ஆட்டோ ஓட்டுநரான இவர், தாய் சாந்தி (70) மனைவி விஜயலட்சுமி (38), குழந்தைகள் பிரதீபா (12), ஹரிணி (10) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் மாரிமுத்து தங்கை கணவர் சென்னையில் இறந்து விட்டதால் அந்த துக்க நிகழ்ச்சிக்காக மாரிமுத்து நேற்று சென்னைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. வீட்டில் சாந்தி, விஜயலட்சுமி, பிரதீபா, ஹரிணி ஆகிய நான்கு பேரும் வீட்டில் உறங்கி உள்ளனர். இந்த வீடு 1972 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.

இதில் இடிப்பாடுகளில் சிக்கிய சாந்தி, விஜயலட்சுமி, பிரதீபா, ஹரிணி ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். நள்ளிரவில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது அப்பகுதியில் உள்ள யாருக்கும் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டு மாடியில் சென்று ஏதேச்சையாக பார்த்துள்ளார். அப்பொழுது மாரிமுத்து வீட்டின் மேற்குறை இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனே அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரியமங்கலம் காவல்நிலைய ஆய்வாளர் திருவாணந்தம் தலைமையிலான போலீசார் பார்வையிட்டதோடு உடனடியாக திருச்சியை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் திருச்சி கண்டோண்மென்ட் தீயணைப்பு வீரர்கள் ஈடுபாடுகளில் சிக்கி இறந்து கிடந்த நான்கு பேர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். புத்தாண்டு பிறந்து உலகமே புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டும் வரும் நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision