19 வயது மகனின் தாய்க்கு திருமண ஆசையால் கைது

19 வயது மகனின் தாய்க்கு திருமண ஆசையால் கைது

திருச்சி துவரங்குறிச்சி சேர்ந்த முகமது ரியாஸ் (27). இவரிடம் ஜீனாபானு தனக்கு ஆகவில்லை என்றும், திருமணம் செய்துக்கொள்ள ஆசைப்படுவதாக கூறியுள்ளார். மேலும் தனக்கு பொருளாதார நெருக்கடியை சரிசெய்துக்கொள்ள கடனாக பணம் வேண்டும் என கேட்டு பல தவணைகளாக லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுள்ளார். 

முகமது ரியாஸ் கொடுத்த பணத்தை ஜீனாபானுவிடம் கேட்டுள்ளார். ஆனால் திருப்பி தறாமல் ஜீனாபானு மோசடி செய்துள்ளார். இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் முகமது ரியாஸ் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து ஜீனாபானுவை கைது செய்த போலீசார் அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில்....

அவர் புதுச்சேரியைச் சேர்ந்தவர் என்பதும், முகமது ரியாஸிடம், ரூபாய் 47 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் ஜீனாபானுக்கு 19வயதில் ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision