5 லட்சம் பணம் - தகாத உறவிலிருந்த பெண் கொலை

5 லட்சம் பணம் - தகாத உறவிலிருந்த பெண் கொலை

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கலிங்கமுடையான்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா (45). இவர் கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். 

இவருக்கும் துறையூர் அடுத்த கோனேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த உறவினர் பழனிச்சாமி என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக மல்லிகாவும் பழனிச்சாமியும் சேர்ந்து வசித்து வந்துள்ளனர். பழனிசாமிக்கு சொந்தமான பூர்வீக இடத்தை விற்பனை செய்து அதற்காக முன் பணம் ரூபாய் 5 லட்சத்தை மல்லிகாவிடம் கொடுத்து வைத்திருந்ததாகவும், தற்பொழுது பணத்தை கேட்கும் போது மல்லிகா பணம் இல்லை என கூறியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மல்லிகாவிற்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து அவர் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்துவிட்டார் என கூறப்படுகிறது.இதனை தொடர்ந்து பழனிச்சாமி துறையூர் காவல் நிலையத்தில் சரண்டர் ஆகிவிட்டார். இது பற்றி துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்தது மல்லிகாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision