அமர்வு நீதிமன்ற காவல் நிலைய போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அமர்வு நீதிமன்ற காவல் நிலைய போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினம் நேற்று (26.06.2023) கடைபிடிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலையம் சார்பில் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் திருச்சி பெரிய மிளகு பாறை அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

இப்பேரணியை கண்டோன்மென்ட் சரக காவல் உதவி ஆணையர் கென்னடி கொடியசைத்து தொடக்கி வைத்தார். மேலும் போதைப் பொருள் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உதவி ஆணையர் கென்னடி, காவல் ஆய்வாளர் சிவகுமார் மற்றும் உதவி ஆய்வாளர் மோகன் ஆகியோர் எடுத்துரைத்தனர். 

பின்னர் இப்பேரணி பள்ளியில் தொடங்கி மத்திய பேருந்து நிலையம் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்து அடைந்தது. இதனை தொடர்ந்து திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு) செல்வகுமார், பெரிய மிளகுபாறை அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி போதை பொருள் எதிர்ப்பு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். 

இதே போன்று திருச்சி தேசிய கல்லூரியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து பதாகைகளுடன் மாணவர்கள் பேரணி சென்றனர். பின்னர் போதை பொருள் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் குமார் தலைமை உரை ஆற்றினார். கண்டோன்மென்ட் காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமார் இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் போதைப் 2.0 பொருள் பயன்பாடு கலந்துள்ளது குறித்தும், போதைப் பொருட்களின் பயன்பாட்டினை தவிர்க்கும் போது தான் சமூக வளர்ச்சிக்கான கதவு திறக்கப்படுகிறது என்று பேசினார்.

பின்னர் கண்டோன்மென்ட் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மோகன் போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வைத்து போதைப் பொருட்களின் கேடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தொடர்ந்து மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைபோட்டி, ஓவியப்போட்டிகள் நடைபெற்றன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn