பொதுமக்களின் புகாருக்கு உடனே தீர்வு தந்த திருச்சி எம்எல்ஏ

பொதுமக்களின் புகாருக்கு உடனே தீர்வு தந்த திருச்சி எம்எல்ஏ

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட 35 வார்டு ஜே.கே நகர் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை குடிநீர் வடிகால் வாரியம் அமைந்துள்ளது. இங்கிருந்து லூர்து நகர், ஆர்.எஸ்.புரம், ராஜ கணபதி நகர் உள்ளிட்ட 35 வாரடுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இங்கிருந்து தான் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜே.கே.நகர் முதல் தெருவில் திறந்த வெளியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் சாக்கடை நீர் போன்று இருப்பதாகவும், புதர்மண்டி, விஷ பூச்சிகள் காணப்படுகிறது. இதுக்குறித்து அப்பகுதி மக்கள் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதராஜ்க்கு புகார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் எம்எல்ஏ இனிகோ இருதராஜ் குடிநீர் தொட்டி நிலை குறித்து தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார். பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் வந்து திறந்தவெளி குடிநீர் தொட்டியில் நீர் கசிவை சரி செய்தும், புதர்களை அகற்றி, தொட்டியின் மேல் பகுதியில் கான்கிரீட் தடுப்புகளை கொண்டு மூடினர்.

பொதுமக்களின் புகாருக்கு உடனடியாக தீர்வு ஏற்படுத்திய கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதராஜூருக்கு நன்றி தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC