மின் கம்பி உரசி திருச்சி வாலிபர் பரிதாபம்

மின் கம்பி உரசி திருச்சி வாலிபர் பரிதாபம்

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே நானாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் இவரது மகன் விக்னேஸ்வரன் (22). இவர் ஏலூர் பட்டி பகுதியில் உள்ள கோழி வளர்ப்பு குஞ்சு உற்பத்தி செய்யும் பண்ணையில் வேலை பார்த்து வந்தார்.

இன்று கோழிப்பண்ணையில் கட்டிட வேலை நடைபெற்று வரும் நிலையில், அப்பணிகளுக்காக வெளியில் இருந்து டேங்கர் லாரியில் தண்ணீர் வந்துள்ளது. தண்ணீரை லாரி டிரைவர் முழுவதும் வெளியேற்றிய நிலையில் டேங்கில் உள்ள தண்ணீர் முழுவதும் இறக்கியாகிவிட்டதா என்பதை பார்ப்பதற்காக விக்னேஸ்வரன் லாரி டேங்கர் மீது ஏறி பார்த்துள்ளார்.

பின்னர் நிமிர்ந்து நின்ற போது தலைக்கு மேலே சென்ற மின் கம்பி விக்னேஸ்வரன் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த காட்டுப்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விக்னேஸ்வரன் சடலத்தை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் வாலிபரின் இறப்பு குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision