மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட அதவத்தூர் மற்றும் மணிகண்டம் பகுதியை மாநகராட்சியுடன் இணைப்பதை கண்டித்து 1,500க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் 90 % விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் எங்களது கிராமங்களை மாநகராட்சி உடன் இணைக்க கூடாது என கூறி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததில் அடிப்படையில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision